Friday, 24 October 2014

சினிமா ரகசியம்-5:வியாபார தந்திரம்.


 (அய்யோடா...புள்ளிவிவரத்தோட கிளம்பிடான்யா..கிளம்பிட்டான்)


DTH இல் முதன் முறையாக ரிலீஸ்,Barco Auro-3D Sound,3000 பிரிண்டுகள் என்றெல்லாம் பிரமாண்டமாக கதைக்கிறார்கள், அதை எல்லாம் கேட்கும் போது தமிழ் சினிமா எங்கேயோ போய்விட்டது என சாமானிய ரசிகர்கள் வாய் பிளக்கிறார்கள், உண்மையில் தமிழ் சினிமாவின் வியாபார வீச்சு எந்த அளவுக்கு உள்ளது, சொல்வது போல செயலில் காட்டுவது சாத்தியமா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

முதலில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் நிலவரத்தினைப்பார்ப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் மொத்த எண்ணிக்கை நிலவரம்.As per tn govt revenue department stats.

ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளைக்கொண்ட பன்னரங்குகளின் எண்ணிக்கையும் இதில் அடக்கம் என நினைக்கிறேன்.

CINEMA THEATRES IN TAMIL NADU:

2010-11

Permanent -1085

Open Air Theatres-5

 Semi Permanent-75

Touring Theatres-32

Total=1,197

http://www.tn.gov.in/deptst/Tnataglance.htm#CINEMA THEATRES

இதில் பெருநகரம்,நகரம், சிற்றூர் வாரியாக திரையரங்குகளின் பரவலை காணலாம்.

மெட்ரோ-1 :சென்னை

மாநகராட்சி-9

திருச்சி,மதுரை,கோவை,சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு,திருநெல்வேலி.

சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 40 அரங்குகள் தேறினாலே அதிகம், எனவே 40 எனக்கொள்வோம்.

மற்ற ஒன்பது மாநகர எல்லைக்குள் தலா 20 எனக்கொண்டால், மொத்தம் 180 அரங்குகள்.

எனவே மாநகரப்பகுதிகளில் உள்ள அரங்குகள் மொத்தம் -220

நகராட்சி -150

செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ,கடலூர் போன்ற ஊர்கள் ஆகும்.

மறைமலைநகர் போன்ற நகராட்சிகளில் தியேட்டர்களே கிடையாது.

நகராட்சி வகை ஊர்களில் ஒரு ஊருக்கு சுமார் 4- 5 அரங்குகள் இருக்கலாம், தோராயமாக 4 என வைத்துக்கொண்டால் ,

4*150= 600 அரங்குகள்.

டவுன் பஞ்சாயத்து-559

கூடுவாஞ்சேரி, வளசரவாக்கம் போன்றவை எல்லாம் டவுன் பஞ்சாயத்துகள் ஆகும், பெரும்பாலான இடங்களில் தியேட்டர்கள் இருக்காது, அப்படி இருக்கும் பல திரையரங்குகளில் புதியப்படம் வெளியாவதில்லை.

செமி பெர்மனண்ட் தியேட்டர் 75 இருப்பதாக பார்த்தோமே அவை இங்கு இருக்கலாம்.

இன்னும் சில டவுன் பஞ்சாயத்துகளில் ஓரளவு நல்ல தியேட்டர்கள் இருக்கலாம், ஆனால் புது படம் வெளியாவது வெகு அறிதே, அப்படியும் புதுப்படங்கள் வெளியாகும் வகையில் சுமார் 150 அரங்குகள் இருக்கலாம் என வைப்போம்.

கிராம பஞ்சாயத்து-12,524

இங்கு டூரீங்க் கொட்டகை போன்றவையே இருக்கும், அதும் அழிந்து தற்சமயம் 32 மட்டுமே இருக்கிறது.

(the show over-end of the entertainment)
டிஜிட்டல் மயமான திரையரங்குகளின் எண்ணிக்கை:

qube theatres-510

http://www.qcn.in/theatres/Tamil-Nadu

UFO theatres -242

http://www.ufomoviez.com/UFO_Presence.aspx?mode=state

தமிழகத்தில் உள்ள 1,197 அரங்குகளில் மொத்த டிஜிட்டல் அரங்குகள்எண்ணிக்கை=510+263=773.

இவற்றில் புதிய படங்கள் வெளியிட வாய்ப்புள்ள திரையரங்குகள்:

மாநகரம்=220

நகரம்=600

டவுன் பஞ்சாயத்து= 150

மொத்தம்= 970

ஆனால் அனைத்து தியேட்டரிலும் ஒரே படத்தினை வெளியிட இயலாது, ஒரு நகரில் 4 அரங்குகள்  இருந்தால் ஒன்றில் தான் வெளியிடுவார்கள், முதல் சில நாட்கள் மட்டும் ஒரே நகரில் இரண்டு அரங்குகளில் ஷேரிங்கில் வெளியிடும் வழக்கம் உண்டு, அது ஓப்பனிங் வாரத்திற்கு மட்டுமே இருக்கும் எனலாம்.

எனவே ஒரே ஒரு புதிய படம் அதிகப்பட்சம் எத்தனை அரங்கில் தமிழ்நாட்டில் வெளியாக வாய்ப்புள்ளது எனப்பார்ப்போம்.

மாநகராட்சியில் 220 அரங்கு எனில் அதில் சுமார் 100 அரங்குகள் என கொள்ளலாம்.

நகரப்பகுதியில் நகருக்கு ஒன்று என கொண்டால் -150

இரண்டு அரங்கு எனில் 300

டவுன் பஞ்சாயத்து 150 இலும் வெளியாகிறது என வைத்துக்கொண்டாலும் ,

மொத்தமாக 100+300+150= 550 அரங்குகள் மட்டுமே.

இந்த எண்ணிக்கையில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே நல்ல பார்வையாளர் கூட்டம் வருவதற்கு வாய்ப்புண்டு, மற்றபடி அதிக அரங்குகள் என வெளியிடுவதால் வருமானம் பெரிதாக உயராது.

ஏன் எனில் அருகிலேயே இன்னொரு அரங்கு இருந்தால் பார்வையாளர்கள் பிரிந்து ,அரங்க வருமானம் தான் பகிரப்படும், எனவே வருவாய் அதிகம்  உயராது.

அப்படியே மிக அதிக எண்ணிக்கையில் எல்லா ஊரிலும் ,எல்லா தியேட்டரிலும் வெளியிட்டாலும் 1090 தியேட்டர்களில்  மட்டுமே வெளியிட முடியும்.அப்படி செய்வது சாத்தியமேயில்லை என்று வைத்துக்கொண்டாலும் 1090 தியேட்டர்கள் என வைத்துக்கொண்டால் , 3000 பிரிண்ட்கள் என வெளியிடுவதாக சொல்லுபவர்கள் மற்றவற்றை எங்கு திரையிடுவார்கள்?

தமிழ்நாட்டுக்கு வெளியில் தான் திரையிட வேண்டும், தமிழ்நாட்டுக்கு வெளியில் எல்லாம் தமிழ் படங்களின் வியாபாரம் தியேட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லை, மொத்தமாக தெலுங்கு, மலையாளம் ,இந்தி என விலைப்பேசுவார்கள், பின்னர் அயல்நாடு.

எனவே 2000 பிரிண்ட் என சொல்லி எல்லாம் விற்க இயலாத போது 2000 பிரிண்ட் போட ஆகும் செலவே அதிகம் ஆகும் என்பதால், ஒரு குறிப்பிட்ட வருவாய் தரும் அவுட் சைட் தமிழ்நாடுக்கு எல்லாம் யாரும் 2000 பிரிண்ட் போட வாய்ப்பேயில்லை.

இது வரையில் வெளியான தமிழ்ப்படங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பிரிண்ட் போடப்பட்டு வெளியான தமிழ்ப்படம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் மட்டுமே, சுமார் 2500 பிரிண்ட்கள் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 900 பிரிண்ட்கள் வெளியாகி இருக்கக்கூடும், சரியான எண்ணிக்கை உறுதியாக எந்த தளத்திலும் இல்லை, ஆனால் வெளிநாட்டு பிரதிகளின் எண்ணிக்கை 300 என தெளிவாக சொல்லியுள்ளார்கள், இன்றைய தேதி வரையில் உலக அளவில் 300 பிரிண்ட்கள் வெளியான ஒரே தமிழ்ப்படம் எந்திரன் மட்டுமே.

//Tamil Superstar Rajinikanth's fans camped outside cinema halls and queued up at ticket counters since early morning today to buy tickets to his latest venture 'Enthiran (Robot).

Being shown across 300 screens outside India, 'Enthiran' is the largest worldwide release after Hollywood film 'Spiderman'. The movie is being screened in Singapore, Malaysia, UK, China and the US.//

http://www.indianexpress.com/news/rajinikanths-enthiran-magic-grips-malaysia/691605/0

எனவே எந்திரன் தமிழ் நாடு 900 +வெளிநாடு 300 =1200 பிரிண்ட்கள், மற்ற 1300 பிரிண்ட்கள் இந்தியாவின் மற்ற மொழிகளில் வெளியாகி இருக்கும் எனலாம், இதுவே தமிழ் சினிமாவின் மிக அதிகப்பட்ச வியாபார எல்லையாகும், இதனை தாண்டிய எண்ணிக்கையில் வெளியிடுவது , வியாபார ரீதியாக லாபகரமானதாக எந்த தமிழ்ப்படத்திற்கும் இருக்க வாய்ப்பில்லை.

அப்போ 3000 பிரிண்ட் போட்டு உலக அளவில் வெளியிடப்போவதாக சொல்வதெல்லாம் வாயிலேயே வடைசுடும் தொழில்நுட்பமே :-))



சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், விஷ்வரூபம் 2000 தியேட்டர்களில் வெளியாகும் என தெரியவருகின்றனது.

லோகநாயகர் ,இந்து பிசினெஸ்லைனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மொத்தம் 2000 பிரதிகள் வெளியாகும் என்றும் ,அவற்றில் 400 தமிழிலும்,அகில இந்திய அளவில் 1200 பிரதிகளும் என்கிறார், அப்படியானால் அயல்நாட்டில் 400 பிரதிகள் என கணிக்கலாம்.

செய்தி:

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

//Have you signed up with all the six DTH players?

No. So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium.

How many DTH homes do you expect to watch the movie at this price point?

The DTH players we have tied up with so far, collectively reach around 15 lakh homes. I expect at least 40-50 per cent would watch.

Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.

How much do you think Viswaroopam would gross?

I do not want to predict. But I can safely say the movie would gross at least Rs 150 crore.

How many screens are you planning?

Globally 2,000 screens. Of this, 400 in Tamil Nadu, 1,200 in other parts of the country.

Would you be able to rope in so many with this kind of protest?

In politics and business, there is no permanent enemy. The same people who are on my side now were on the other side of the fence when I said we cannot fight satellite channels 20 years ago. This is the way going forward, and we have to embrace technology and sail with that.//

அகில இந்திய அளவில் டிடிஎச் மார்கெட் அளவினை காட்டும் படம்.


இதில் மொத்தம் 48 மில்லியன் டிடிஎச் பயணாளர்கள் என்றாலும் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 29 மில்லியன்கள் என்பதை கவனிக்கவும், ஏன் எனில் அவர்கள் தான் உண்மையான  வாடிக்கையாளர்கள், மற்றவை எல்லாம் பயன்ப்பாட்டில் இல்லாத செட் டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை எனலாம்.

மேலும் தற்போது டாடா ஸ்கை பின்வாங்கியதாக தெரிகிறது, டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் பிக் டீவீ,ஏர் டெல் ஆகிய நான்கிலும் தமிழில் மட்டுமே டிடிஎச் இல் வெளியாகும் என்கிறார்.

தமிழ்நாட்டின் டிடிஎச் வாடிக்கையாளர்களில் முதலிடம் வகிக்கும் சன் டிடிஎச் 75-80% வைத்துள்ளது, அப்படி இருக்கும் போது மற்ற நான்கு சேவைகளிலும் 15 லட்சம் பேர் என சொல்வது மிகையான எண்ணிக்கையாகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த டிடிஎச்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே சுமார் 21 லட்சம் தான். அதில் சுமார் 80% சன் டிடிஎச் வசம் என்னில் எஞ்சியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என ஒரு கணக்கீடு,

//Sun Direct, with 17.5 lakh connections, controls 80% to 85 % of the DTH subscriber base in Tamil Nadu. The balance is shared by other operators like Airtel, Videocon, Tata Sky and Dish TV.//

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-16/chennai/30164367_1_dth-arasu-cable-tv-entertainment-tax

தமிழ் நாட்டில் 80-85% டிடிஎச் இணைப்புகளை சன் டிவி வைத்துள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 17.5 லட்சங்கள் என்கிறார்கள்.

80% என்றே எடுத்துக்கொள்வோம், = 17.5 லட்சம் என்றால் 100%?

17.5*100/80=21.875 லட்சங்கள்.

சன் டிவி யின் புள்ளிவிவரங்கள் சரியாக இருக்குமானால் தமிழ்நாட்டில் செப்டம்பர் ,2011 வரையில் 21.875 லட்சங்கள் தான் மொத்த டிடிஎச் இணைப்புகள் மட்டுமே.

சன் டிடிஎச் இன் 17.5 லட்சம் போக மீதம், 4.375 லட்சங்கள்.

அதனை டாடா, டிஷ், ஏர்டெல், பிக் டீவி, விடியோகான் ஆகியோர் சமமாக பிரித்துகொள்வதாக கொண்டால்.

ரிலையன்ஸ், டிஷ், விடியோகான், ஏர்டெல் ஆகியோருக்கு சுமார் நான்கு லட்சம் இணைப்புகளுக்கு கீழ் தான் வரும், இதில் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை என பார்த்தால் இன்னும் குறையும், அவற்றில் கட்டாயாம் 1000 ரூ செலுத்தி லோகநாயகரின் படத்தை எத்தனைப்பேர் பார்ப்பார்கள்? அதுவும் ஒரே ஒரு முறைக்கு!!!

தியேட்டர் கட்டண உயர்வுக்கு யார் காரணம்?


தியேட்டரில் கட்டணம் உயர்ந்துவிட்டதால் தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை ,அப்படி வராதவர்களை வர வைக்கவே டிடிஎச்சில் வெளியிடுவதாக லோகநாயகர் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல எப்படி என்றுப்பார்ப்போம்.

ஆதிகாலத்தில் எல்லாம் திரைப்பட விநியோகம் சதவீத அடிப்படையில் திரையிடப்படும், விநியோகஸ்தரும், திரையரங்கங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை  வசூலில் எடுத்துக்கொள்வார்கள், அதாவது சுமார் 40% ,மீதி 60% தயாரிப்பாளருக்கு, இம்முறையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கங்கள் முதலில் பணம் முதலீடு செய்ய தேவையில்லை.

பின்னர் படம் கிடைக்க போட்டி உருவாகவே ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் எடுத்து திரையிட்டால் நல்ல வசூலாகும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்கள் முன்னதே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து ஏரியா வாங்க ஆரம்பித்தனர் ,இப்படியாக எம்.ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி பணம் செலுத்தும் முறை உருவாகியது.

(MGR- The Real Box Office King)

எம்ஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றால் மிகையல்ல, அவரது படங்கள் நிச்சயம் விநியோகஸ்தரை காலை வாரிவிடாது என்ற நம்பிக்கையில் ,படம் துவங்கிய அன்றே ஏரியா விற்பனை ஆகி தயாரிப்பாளர் கையில் பணம் கிடைத்துவிடும், அதை வைத்தே தயாரிப்பாளர்கள் படத்தினை எடுத்து முடிப்பார்கள்.

இதனால் எம்.ஜி.ஆர் என்பதையே மினிமம் கியாரன்டி .ராமசந்திரன் என சொல்வார்களாம்.

விநியோகஸ்தரிடம் நியாயமான அளவுக்கு எம்ஜி வாங்கி தயாரித்தவரையில் இம்முறையில் யாருக்கும் நட்டம் வரவில்லை. பின்னர் நடிகர்கள் சம்பளம் கோடிகளில் போய் தயாரிப்பு செலவு அதிகம் ஆனது ,எனவே போட்டக்காசினை எடுக்க தயாரிப்பாளர் அதிக எம்.ஜி கேட்க , விநியோகஸ்தர்களும், திரையரங்குகளிடம் அதிக எம்ஜி தொகை கேட்கலாயினர்.

எம்ஜி தொகைக்கு ஏற்ப வசூலானால் பரவாயில்லை நூற்றுக்கு 90 படங்கள் ஒரு வாரம் கூட ஹவுஸ்ஃபுல் ஆக ஓடுவதில்லை பின் எப்படி திரையரங்குகள் கட்டிய எம்ஜி ஐ எடுக்க முடியும் , எனவே ஓடும் ஒரு வாரத்திற்குள் போட்ட காசை எடுக்க அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க திரையரங்குகள் முற்பட்டன. இப்படியாகத்தான் திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்தது.

மலிவாக படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் திருட்டு டிவிடி பக்கம் போனார்கள், தாய்குலங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கினார்கள் ,இதனால் பல திரையரங்குகளும் காற்றாடின, 2000 ஆண்டு வாக்கில் தமிழ் நாட்டில் சுமார் 2000 அரங்குகள் இருந்தன இன்று அவை 1,197 என்ற எண்ணிக்கையில் சுருங்கிவிட்டன, இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கீழ் போய்விடும் எனலாம்.

சிறிய படங்களை போட்டாலும் கட்டணம் குறைவாக வைப்பதில்லை என்கிறார்கள், உண்மை தான் ஆனால் எந்த சிறிய படத்தயாரிப்பாளரும் குறைவான கட்டணம் வைத்து பொறுமையாக வசூலீக்க நினைப்பதில்லையே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட முதலை எடுக்க நினைக்கிறார்கள்.

ஏன் எனில் திரையரங்க வருமானம் என்பது ஒரு நாள் அரங்க வாடகை என நிர்ணயித்த கட்டணம் மட்டுமே, டிக்கெட் விலை கூட இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அத்தொகை மட்டுமே அரங்க உரிமையாளருக்கு, மற்றவை எல்லாம் விநியோகம் செய்தவர் மூலம் தயாரிப்பாளருக்கு போய்விடும்.

தினசரி வசுலின் அடிப்படையில் பணத்தினை பெறுவது ரிஸ்க் என எம்ஜியில் விற்கிறார்கள், எம்.ஜி எடுக்க முதல் மூன்று நாள் ஓப்பனிங்க் கலெக்‌ஷன் தான் வழி எனவே திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

எனவே திரையரங்கில் கட்டணம் குறைய வேண்டுமானால் தயாரிப்பாளர் தான் முதல் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வளவு பேசும் லோகநாயகர் , திரையரங்குகள் அரசு நிர்ணய கட்டணம் மட்டும் வாங்கிக்கொண்டு எனது படத்தினை திரையிடுங்கள், எத்தனை நாள் ஓடுதோ அதற்கேற்ப எனக்கு வசூலாகட்டும் என சொல்ல வேண்டியது தானே?

மேலும் தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி இல்லை என சட்டம் இருக்கிறது, கண்டப்படி பெயரை வைத்துவிட்டு தமிழ் என சொல்லி கேளிக்கை வரிப்பெரும் தயாரிப்பாளர்கள், கேளிக்கை வரி தள்ளுபடிக்கு இணையான அளவுக்கு கட்டணம் குறைக்க சொல்ல வேண்டியது தானே, ஆனால் அப்பணத்தினை எடுத்து செல்வதும் தயாரிப்பாளர்களே அல்லவா?

லோகநாயகர் , விஷ்வரூப் என இந்தியில் பெயர் வைத்துள்ளார், அதனை தமிழில் "விஸ்வரூபம்" என எழுதிவிட்டால் தமிழ்ப்பெயர் என ஏதாவது சொல்லி கேளிக்கை வரி வாங்கிவிடுவார் ,அதற்காக தான் பம்மிக்கொண்டு மம்மியைப்பார்த்ததும், சேட்டலைட் உரிமையை ஜெயா டீவிக்கு கொடுத்ததும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.

லோகநாயகர் , கேளிக்கை வரிக்கு ஏற்ப கட்டணம் குறைப்பேன் என சொல்லி திரையிட்டால் திரையரங்குகள் எதிர்க்க போவதில்லை, ஏன் எனில் எம்ஜியில் வெளியிடாமல் பெர்செண்டேஜில் வெளியிடுகிறேன், திரையரங்குகளுக்கு நஷ்டம் வராது என சொல்கிறார் அல்லவா , செய்ய வேண்டியது தானே?

DTH EFFECT:


# டிடிஎச் இல் வெளியிடுவது புரட்சி , அது திரையரங்குகளுக்கு வர இயலாதவர்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள், ஆனால் அது வருங்கால சாபமாக முடியும் எனலாம்,

இன்று வரையில் தமிழ்நாட்டில் திரையரங்க நுழைவு கட்டணம் ,சினிமாட்டோ கிராபி ஆக்ட் 1939 படியே அரசு நிர்ணயம் செய்கிறது, இதனால் மல்டிபிளெக்சில் 120 ரூ அளவிலும் நகரப்பகுதியில் 50 ரூ எனவும் அரசு நிர்ணய கட்டணம் உள்ளது.

மும்பை,பெங்களூரில் எல்லாம் மல்டிபிளெக்சில் 250 ரூ அளவிலும்,சாதாரண அரங்கில் 100 ரு போல இருக்கிறது.

ஆந்திராவில் நம்மை விட கட்டணம் குறைவு.

தியேட்டரில் கட்டணம் கூடுதல் என்பதால்  மக்கள் வரவில்லை என்றால், டிடிஎச் இல் ஆயிரம் ரூ 1000 கட்டணம் வைத்தால் மட்டும் அதிலும் பார்த்துவிட்டு பின்னர்  தியேட்டருக்கும் எப்படி மக்கள் வருவார்கள், ஏற்கனவே சுளையாக ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது ,பின்னர் தியேட்டருக்கு செல்ல மீண்டும் ஆயிரம் ரூபாய் செலவிட யாரால் முடியும், மன்னு மோகன் சொன்னது போல பணம் என்ன மரத்திலா காய்க்கிறது, ஒரே வாரத்தில் ஒரே படத்துக்கு இரு முறை ரூபாய் இரண்டாயிரம் செலவு செய்ய ?

டிடிஎச் இல் படம் ரிலீசுக்கு முன்னர் பார்ப்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், படம் நன்றாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட நல்லா இருக்குனு சொல்ல மாட்டான்,ஆனால் படம் மோசமா இருந்துச்சுன்னா, முகநூல்,துவித்தர், எஸ்.எம்.எஸ் ,பிலாக்னு எல்லா இடத்திலும் காரித்துப்பி முதல் நாளே நெகட்டிவ் விமர்சனம் செய்து , கல்லாப்பெட்டிக்கு குண்டு வைத்துவிடுவான் :-))

ஆனால் பொது மக்கள் என்ன செய்வார்கள் எனில், தியேட்டர் போனால் செலவாகும், டிடிஎச் இல் பார்த்தால் இன்னும் செலவாகும்,எனவே  டிடிஎச் மூலம்  HD video தரத்தில் உருவாக்கப்பட்டு  கிடைக்கும் திருட்டு டிவிடி பார்ப்போம் என வீட்டில் இருந்து தரமான திருட்டு டிவிடி பார்ப்பார்கள் :-))

ஆனால் எது எப்படியோ திரையரங்க கட்டண நிர்ணயம் என்பது அரசின் கையில் இருப்பதால் ,நினைத்தப்படி கட்டணத்தினை அதிகாரப்பூர்வமாக மற்றவர்களால் உயர்த்த முடியாத கடிவாளம் உள்ளது.

ஆனால் டிடிஎச் இல் என்ன கட்டணம் நிர்ணயம் செய்வது என்ற கட்டுப்பாடு அரசிடம் இல்லை. டிடிஎச் மற்றும் படத்தயாரிப்பாளர் சேர்ந்து நிர்ணயிக்கலாம், அதனால் தான் லோகநாயகரின் படத்துக்கு ஒரே முறை பார்க்க 1000 ரூ என்றெல்லாம் அநியாயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை சூப்பர் ஸ்டார் படம் டிடிஎச் இல் வெளியானால் என்ன செய்வார்கள், 1,500 ரூ என்பார்கள், பின்னர் விஜய் ,அஜித், சூர்யா எல்லாம் நாங்க மட்டும் இளைத்தவர்களா எனப்போட்டி போட்டு விலை வைக்கக்கூடும்.

அதாவது அரசிடம் இருக்கும் கட்டண நிர்ணய அதிகாரத்தினை எடுத்து டிடிஎச் ஆபரேட்டர்கள் எனப்படும் பெரு முதலாளீகள் கையில் கொடுக்கிறார் லோகநாயகர், இது வருங்காலத்தில் வெற்றியடைந்தால் பணக்காரர்கள் மட்டுமே திரைப்படம் பார்க்கும் சூழலையும் உருவாக்கலாம்.

வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் வந்தால் ஆரம்பத்தில் விலையை குறைத்து போட்டியாளர்களை அழித்துவிட்டு , பின்னர் விலை உயர்த்திவிடுவார்கள் என பூச்சாண்டிக்காட்டுவோர்களும், ஆரம்பத்திலேயே விலையை அதிகமாக வைக்கும் டிடிஎச் பின்னாளில் போட்டியாளர்களான திரையரங்குகள் இல்லாத நிலையில் இன்னும் விலை ஏற்றி நுகர்வோர்களை கட்டுப்படுத்தும் என்பதை உணராமல் ஆஹா  நல்ல முயற்சி என்கிறார்களே, நேரத்துக்கு ஏற்ப கொள்கை போல :-))

# திரைப்பட வியாபார வருவாய் என்பது இது நாள் வரையில் , தியேட்டர்கள், அதன் ஊழியர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள்,விநியோகஸ்தர்கள்,அதனோடு தொடர்புடைய ஊழியர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் பகிரப்பட்டு ,அனைவருக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது.

டிடிஎச் முறை முழுக்க தலையெடுத்தால் இம்முறையில் வருவாய் டிடிஎச் ஆபரேட்டர்கள் எனும் பெரு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மட்டுமே பகிரப்படும் நிலை  உருவாகும்.

# வெளிநாட்டிலும் தமிழ்ப்படங்கள் டிடிஎச் இல் வெளியிடலாம் ,எனவே தமிழ்ப்படங்களுக்கு நல்ல வருவாய் பெருகும் என மனக்கோட்டை கட்டுகிறார்கள், ஆனால் வெளிநாட்டில் டிடிஎச் இல் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் உள்ள சட்டம் என்ன சொல்கிறது என்றால், குறிப்பிட்ட மொழியில் டிடிஎச் சேவை ஒளிப்பரப்ப உரிமை வாங்கியவர்கள், அம்மொழியில் உள்ள மீடியாவைத்தான் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் ஒளிபரப்பலாம் என்கிறது.

ஆங்கில டிடிஎச் சேவையில் ஆங்கிலப்படங்களும் ,பிரெஞ்ச் டிடிஎச் எனில் பிரெஞ்ச் படங்களுமே ஒளிபரப்பலாம், தமிழில் ஒளிபரப்பினால் டிடிஎச் லைசென்ஸ் ரத்து ஆகிவிடும்.

# சேட்டிலைட் உரிமம் என ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கும் போது ,அதன் டிடிஎச் உரிமம் அதில் அடங்கிவிடுவது போல தான் தற்போதுள்ளது, எனவே ஜெயா டீவிக்கு சேட்டிலைட் உரிமம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் எதிர்த்தால் டிடிஎச் இல் ஒளிபரப்ப இயலாது. ஒரு வேளை தனியே பிரித்து உரிமம் வழங்கினாரா என தெரியவில்லை.

பிரச்சினை உருவாக்குவது என்றால் , டிடிஎச் உம் சேட்டிலைட் ஒளிபரப்பு எனவே , எங்களுக்கு விற்ற பின் டிடிஎச் இல் ஒளிபரப்ப கூடாது என ஜெய டீவி சொன்னால் , டிடிஎச் திட்டமே எடுபடாது.

இதே போல தொலைக்காட்சி உரிமம் பெறுபவர்கள் சேட்டிலைட் உரிமம் , டிடிஎச் உட்பட அனைத்தும் என்றால் , பெரிதாக வியாபாரம் டிடிஎச் இல் இருக்கு என சொல்வதும் அடிப்பட்டு விடும்.

---------------

ஒலி நுட்பம்:

(Rajni -the Mass)
சிவாஜி -3டி இல் இம்மாதம் மீண்டும் வெளியானதை அனைவரும் அறிவீர்கள், அதோடு அல்லாமல் டால்பி அட்மோஸ் -64 சேனல் 3டி ஆடியோவில் வெளியாகியுள்ளது, இந்தியாவில் சென்னை சத்யம் -செரின் அரங்கிலும், மும்பையில் ஒரு அரங்கிலும் மட்டுமே டால்பி அட்மோஸ் நிறுவப்பட்டுள்ளது. இது ஆரோ 11.1 3டி விட பல சேனல்களில் 3டி ஆடியோவை அளிக்க வல்லது, இதனை 3டி இம்மெர்சிவ் சவுண்ட் என்கிறார்கள்,அப்படி இருந்தும் பெரிதாக இவ்வொலி அமைப்பில்  உருவான முதல் தமிழ் படம் என விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை, மேலும் லைப் ஆஃப் பை என்ற படமும் டால்பி அட்மோசில் தான் வெளியானது அவர்களும் நாங்கள் தான் சிறப்பான ஒலியுடன் படம் காட்டுகிறோம் என சொல்லிக்கொள்ளவில்லை.

சிவாஜி பழைய படம் ஆயிற்றே அதற்கு எப்படி டால்பி அட்மோசில் மீண்டும் ஒலிச்சேற்கை செய்திருப்பார்கள், புதிதாக ரீ-ரிக்கார்டிங் ஏ.ஆர் .ரஹ்மான் செய்திருப்பாரா என்றெல்லாம் யாருக்கும் கேள்வியே எழவில்லையா?

உண்மையில் புதிய ரீ -ரிக்கார்டிங் எல்லாம் செய்வதில்லை, எல்லாம் பழைய கள் புதிய மொந்தை டெக்னிக் தான் ,5.1 ஆடியோ டிராக்கினை மீண்டும் அடோப் பிரிமியர் புரோ டூல்ஸ்,MAC pro tool போன்ற ஒலி சேர்க்கை மென்பொருளில் கொடுத்தால் மீண்டும் 5.1 டிராக் ஆக தனியாக பிரித்து கொடுக்கும்(ஆனால் பழைய PCM track போல இருக்காது)  , அதனை அட்மோசின் 64 டிராக்கிற்கு ஏற்ப மறு ஒலிச்சேர்க்கை ,செய்து ,அட்மோஸ் கோடக்கில் கொடுத்தால் 64 டிராக் ரீ-ரிக்கார்டிங் தயார்.

உண்மையில் 64 டிராக் என்பதெல்லாம் கணினி மென்பொருள், கோடிங், மற்றும் மெட்டா டேட்டா வைத்து உருவாக்குவதே , இவ்வாறு பழைய ஆடியோ டிராக்கினை எடிட்டிங்கில் மாற்றுவது அப்ஸ்கேலிங் என்பார்கள்,ஆனாலும் புதிதாக ரீ-ரிகார்டிங் செய்த அளவுக்கு இருக்காது,முழுதாக பின்னர்  இன்னொரு பதிவில் காணலாம்.

இதை விட இன்னொரு எளிய வழி இருக்கிறது, எந்த பழைய ஒலிச்சேர்க்கை கோப்பையும் டால்பி அட்மோஸ்,ஆரோ போன்ற ஒலிச்சேர்க்கை கருவியில் கொடுத்தாலும் தானாகவே பல சேனல் ஆடியோ ஆக மாற்றிவிடும், இதனை அப்மிக்ஸிங் என்பார்கள்.

எனவே தற்போது இந்தியாவில் ஆரோ,அட்மோஸ் ஆகிய ஒலிச்சேர்க்கையில் அனுபவம் கொண்ட ஆடியோ ரெக்கார்டிங் சென்டர்களே இல்லாத சூழலில் அனைவரும் அப்மிக்ஸிங் செய்திருக்கவே வாய்ப்புள்ளது, எனவே தான் சிவாஜி 3டி அட்மோஸ் படம் அமைதியாக வெளியாகியுள்ளது எனலாம், ஆனால் லோகநாயகர் ,படத்தினை விளம்பரப்படுத்த கொஞ்சம் அதிகமாகவே ஆரோ 11.1 3டி என சவுண்டு கொடுக்கிறார் :-))

அடுத்தப்பதில் ஆரோ 3டி, டால்பி அட்மோஸ் போன்ற மல்டி சேனல் ஆடியோ முறைகளை ஒப்பிட்டு அவை எல்லாம் வெறும் எண்ணிக்கை விளையாட்டே, உண்மையான ஒலிதரத்தின் அளவில் பெரிதாக ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்பதை காணலாம்.
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து பிசினெஸ் லைன்,இந்தியன் எக்ஸ்பிரஸ்,dreamdth.com, தமிழக வருவாய் துறை, விக்கி, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------------------------------------

சினிமா ரகசியம்-4:VISHWAROOPAM IN DTH RELEASE வெற்றியடையுமா?


 லோக நாயகரின் விஷ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் இதோ,அதோ என கால தாமதம் ஆனதற்கு பலரும் பல காரணங்கள் சொல்லியிருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு காரணத்தினை இப்போது சொல்லப்போகிறேன், அந்த அதி முக்கியமான காரணம் என்னவெனில்,

விஷ்வரூபம் BARCO AURO:3D-11.1  சேனலில் ஒலியமைப்பு செய்யப்பட்டது என முதலில் செய்திகளில் வந்ததை அனைவரும் அறிவீர்கள், அப்பொழுது தமிழ்நாட்டிலோ ,இந்தியாவிலோ  அத்தகைய ஒலியமைப்பு வசதிக்கொண்ட திரையரங்குகளே இல்லை என்ற உண்மையை மாற்றுப்பார்வைகளுக்கு பெயர் பெற்ற ஒரு கில்லாடி தமிழ்ப்பதிவர்  BARCO AURO:3D-11.1  குறித்து பதிவாக வெளியிட்டு ரகசியத்தினை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். (ஹி...ஹி என்ன கொடுமைடேனு சொல்லப்படாது)

அந்த கில்லாடி பதிவர் யார் என அறிய இங்கே செல்லவும் :vishwaroopam in barco auro- 11.1 3d audio.

எனவே புதிய தொழில்நுட்பம் என சொல்லி விளம்பரப்படுத்தி படத்தினை  வெளியிட்டு விடலாம் என நினைத்த நேரத்தில் அப்படி வெளியிட்டாலும் பார்வையாளருக்கு அதனால் பயனே இல்லை என்ற உண்மை  வெளியாகிவிட்டதால், இனி  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பு இல்லாத நிலையில் வெளியிட்டால் ஊடகங்கள் கேலி செய்துவிடும் என திரைப்படத்தினை வெளியிடுவதை தள்ளி வைத்துவிட்டு சில திரையரங்குகளையாவது ,  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பில் மாற்றம் செய்ய லோகநாயகர் தரப்பு முயன்றது இதனாலே இக்கால தாமதம் என கோலிவுட் பட்சிகள் ரகசியமாக கிசு கிசுக்கின்றன :-))

அப்படியும் தமிழ்நாட்டில் சத்யம் திரையரங்கம் ஒன்று மட்டுமே புதிய ஒலியமைப்பினை உருவாக்கியுள்ளது, மேலும் அவர்கள் ஆரோ ஒலியமைப்பினை விட அதிக திறனுள்ள டால்பி அட்மோஸ் 64 சேனல் ஒலியமைப்பினையும் அமைத்து , லைப் ஆஃப் பை திரைப்படத்தினையும் வெளியிட்டு விட்டார்கள்.

இருந்த போதிலும் ,  BARCO AURO:3D-11.1   என்ற ஒலியமைப்பும் தமிழுக்கு இன்னும் புது தொழில்நுட்பமே என்பதால் தமிழ்நாட்டில் சத்யம் அரங்கம் தவிர வேறு எங்கும் , அவ்வொலியமைப்பின் சிறப்பினை உணரும் வாய்ப்பு இன்றைய தேதி வரையில் உருவாகவில்லை. காரணம் ஒலியமைப்பினை மாற்றி அமைக்க சுமார் 20 லட்சம் முதலீடு தேவைப்ப்படுகிறது,எனவே பல அரங்க உரிமையாளர்களும் யோசிக்கிறார்கள்.

இந்நிலையில் குறைந்த பட்சம் சுமார் 30 திரையரங்குகளையாவது  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பில் மாற்றியமைக்க திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி வருகிறார் லோகநாயகர்.

ஆனால் இதற்கு இடையில் லோகநாயகர் தனது விஷ்வரூபத்தினை திரையரங்கு வெளியீட்டுக்கு முன்னர் டி.டிஎச் தொலைக்காட்சி மூலம் மூவி ஆன் டிமான்ட் முறையிலும் வெளியிடப்போவதாக அறிவித்து சல சலப்பை உருவாக்கியுள்ளார், எனவே இப்பொழுது திரையரங்க உரிமையாளர்களும் லோகநாயகருக்கு எதிராக திரண்டுவிட்டார்கள், எனவே மேலும் திரையரங்குகள்  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்புக்கு மாற்றியமைப்பார்களா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது?

தற்போதைய சூழலில் விஷ்வரூபத்தினை  BARCO AURO:3D-11.1  ஒலியமைப்பில் காணும் வாய்ப்பு பெரும்பாலோருக்கு கிடைக்க வழியில்லை என்றே தோன்றுகிறது, என்ன செய்யப்போகிறார் லோகநாயகர்?

Movie On Demand @DTH:





டிடிஎச், அல்லது தொலைக்காட்சியில் திரைப்படத்தினை முதலில் வெளியிடுவது அல்லது DVD,VCR Tape, வடிவில் மட்டுமே திரைப்படத்தினை வெளியிடுவது போன்ற நடைமுறைகள் ஹாலிவுட்டில் நீண்டகாலமாகவே இருக்கிறது.

பெரும்பாலும் இண்டிபென்டன்ட் மூவி மேக்கர்ஸ் எனப்படும் சிறு படத்தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது வழக்கம். குறைவான பட்ஜெட்டில் ஹாரர், ஆக்‌ஷன், கொஞ்சம் கில்மா கலந்து படம் எடுத்துவிட்டு நேரடியாக சேனல்கள், டிவிடி, டேப் என வெளியிட்டு காசுப்பார்த்து விடுவார்கள்.

பின்னர் படம் நல்ல வரவேற்பு பெற்றால் பெரிய அளவில் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யும் வழக்கம் உண்டு. இப்படி முதலில் வீடியோ டேப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி ,பின்னர் திரைக்கு வந்து கலக்‌ஷணை அள்ளிய ஹாலிவுட் திரைப்படங்கள் நிறைய உள்ளன. இதற்கு சிறந்த உதாரணம், எவில் டெட் என்றப்படமாகும்.

ஆனால் இம்முறை சிறிய பட்ஜெட் படங்களுக்கே நல்ல வியாபார யுக்தியாகும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு சரிப்படாது, எனவே ஹாலிவுட்டில் உள்ள பெரிய ஸ்டூடியோக்கள் இம்முறையில் வெளியிடுவதில்லை.

இந்தியாவிலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்னரே ,அரங்குகளில் படம் வெளியான சில நாட்களில் டிடிஎச் சில் மூவி ஆன் டிமாண்ட் முறையில் வெளியிட்டுள்ளார்கள்.

 2009 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான Main Aurr Mrs Khanna என்ற இந்தி திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் ரிலையன்ஸ் பிக் டீ.வி, மற்றும் டிஷ் டிடிஎச் இல் வெளியானது. தயாரிப்பாளரும், டிடிஎச் நிறுவனமும்  50:50 என விகிதத்தில் லாபத்தினை பகிர்ந்து கொண்டார்கள்.




சல்மான்கானின் ரெடி, What s your Rashee, Kaminey, Rock On!!, Delhi 6, The President is Coming, Jodhaa Akbar and Aa Dekhe Zara.போன்ற படங்கள் படம் வெளியான முதல் வாரத்திலிருந்து டி.டிஎச் இல் மூவி ஆன்  டிமான்ட் அல்லது பே பெர் வியு முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

link: http://www.dnaindia.com/money/report_dth-emerging-channel-for-movie-releases_1300685

படத்தின் தயாரிப்பு மதிப்பு, ஸ்டார் வேல்யு, எவ்வளவு சீக்கிரம் டிடிஎச்சில் வெளியாகிறது என்பதை பொருத்து ஒரு படத்திற்கு 25 ரூ முதல் 150 ரூ வரையில் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள்.

ஆனால் விஷ்வரூபம் படத்தினை டிடிஎச்சில் பார்க்க 1000 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வருவதால், அதிகம் பேர் அவ்வளவு அதிக தொகை கொடுத்து பார்க்க விரும்ப மாட்டார்கள் என சொல்லலாம்.

திருட்டு டிவிடி, இணைய தரவிறக்கத்தினை தடுக்க எனில் மலிவான கட்டணம் என்றால் மட்டுமே மூவி ஆன் டிமான்ட் மூலம் பலன் இருக்கும், அதிக கட்டணம் என்றால் , மலிவான திருட்டு டிவிடிக்கே மக்கள் போவார்கள். திருட்டு டிவிடியில் பார்க்க விரும்ப காரணமே திரையரங்க கட்டணம் அதிகமானதால் தான் ,அவ்வாறு இருக்க டிடிஎச் இல் இன்னும் அதிகம் கட்டணம் வாங்குவது எப்படி திருட்டு டிவிடிக்கு போட்டியாக அமைந்து கட்டுப்படுத்தும்?

ஏன் எனில் நல்ல தரமான திரையரங்கில் ,பெரிய திரையில் பார்க்கவே ஒருவருக்கு 120 ரூ தான் கட்டணம் எனும் நிலையில் ஒரு குடும்பத்தில் 5 பேர் திரையரங்கு சென்றாலும் 600 ரூ தான் கட்டண செலவு. மேலும் ஆன் லைன் புக்கிங்க் எல்லாம் உள்ள சூழலில் கொஞ்சம் முன்கூட்டியே முயன்றால் டிக்கெட் வாங்கிவிடலாம். எனவே அவசியம் லோகநாயகர் படம் பார்க்க நினைக்கும் குடும்பம் திரையரங்கில் பார்ப்பதே மலிவாகவும், நன்றாகவும் இருக்கும் எனவே டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து பொது மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் எனலாம்.

தீவிர லோகநாயகர் ரசிகர்கள் மட்டுமே முதல் நாள் ,முதல் காட்சி பார்க்கும் ஆசையில் டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து படம் பார்க்கலாம்.பொது மக்கள் பார்க்கப்போவதில்லை.மேலும் தொலைக்காட்சியில் பார்த்தால் பெருமையாக விளம்பரப்படுத்தப்பட்ட  BARCO AURO:3D-11.1   இன் ஒலியமைப்பையும் அனுபவிக்க முடியாது போன்ற காரணங்களும் டிடிஎச் ரிலீஸ் முறைக்கு பின்னடைவையே சேர்க்கும்.

பட வெளியீடுக்கு முன்னர் டிடிஎச்சில் வெளியிடுவது  திருட்டு டிவிடி தயாரிப்பவர்களுக்கே லாபகரமான எளிய வழியாக இருக்கும், வெறும்  1000 ரூ கொடுத்து படம் பார்த்துவிட்டு எளிதாக டிவிடி தயாரித்து விடுவார்கள், இதனால் ஒரே நாளில் தரமான திருட்டு டிவிடி கிடைக்க ஆரம்பித்துவிடும், First Day Frist Show வின் பொழுதே திரையரங்க வாயிலிலேயே திருட்டு டிவிடி விற்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை,இணையத்திலும் அப்லோட் செய்துவிடுவார்கள்,எனவே திரையரங்கங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படவே வாய்ப்புள்ளது.

டிடிஎச்சில் என்கிரைப்டட் வடிவில் இருக்கும் ,அதனை பதிவு செய்ய முடியாது என நினைக்கலாம், எளிதாக பதிவு செய்யலாம் , பல செட் டாப் பாக்ஸ்களில் பதிவு வசதியுடன் இருக்கிறது டிவிஆர் செட் டாப் பாக்ஸ் என்பார்கள், ஒரு வேளை டிடிஎச் நிறுவனம் ஏதேனும் முறையில் செட்டாப் பாக்ஸில் பதிவு செய்வதை தடுத்தாலும் , இன்னொரு முறையில் பதிவு செய்யலாம் , அது எப்படி என பார்ப்போம்.

SET TOP BOX TO COMPUTER:

இரு முறைகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை கணினியில் காணலாம்.



#.தற்போது வரும் நவீன எல்.இடி டீவிக்களில் HDMI port or wireless networking எல்லாம் உள்ளது எனவே அவற்றின் மூலமும் கணினி, மடிக்கணினியை இணைக்கலாம், பின்னர் விண்டோஸ் மீடியா சென்டர்* மூலம் நிகழ்ச்சியைக்காணலாம் ,பதிவு செய்துக்கொள்ளலாம். அல்லது பல விடியோ கேப்சர் மென்பொருள்கள் உள்ளது அதன் மூலமும் செய்யலாம்.

All in One Media center PC என பல நிறுவனங்களும் கணினி தயாரித்துள்ளன, அவற்றில் புளுரே/டிவிடி ,டிவீ டியுனர் ,HDMI,DVI,USB,LAN,CO-AXIAL jack , CARD Reader,என அனைத்தும் இருக்கும், செட் டாப் பாக்சில் இருந்து இணைப்பை கொடுத்து விண்டோஸ் மீடியா சென்டர்* மூலம் டி.வீ பார்க்கலாம், பதிவும் செய்யலாம்.




* விண்டோஸ் மீடியா சென்டர் மூலம் டீ.வீ பார்க்கும் போது மட்டுமே தொலைக்காட்சி நிறுவனம் சில நிகழ்ச்சிகளை பதிவு செய்வதை கட்டுப்படுத்த முடியும், எனவே மாற்று மென் பொருளை பயன்ப்படுத்தலாம், அல்லது தனியாக ஒரு டீவி ட்யுனர் கார்ட் மற்றும் அதன் மென்பொருளைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

#செட் டாப் பாக்சில் அனலாக் மற்றும் டிஜிட்டல் அவுட் புட் என இரண்டும் உள்ளது , அதன் அவுட் புட்டினை நேரடியாக எடுத்து ஒரு டி.வி டியுனர் கார்டின் மூலம் கணினியுடன் இணைக்கலாம், பின்னர் கணினில் பதிவும் செய்துக்கொள்ளலாம்

நேரடியாக செட் டாப் பாக்சினை டிவி டியுனர் கார்டு மூலம் கணினியில் இணைத்து பதிவு செய்யும் முறையை விளக்கமாக காணலாம்.

சந்தையில் 1,500 ரூபாய்க்கு எல்லாம் தரமான எக்ஸ்டெர்னல் யு.எஸ்.பி டீ.வி டியுனர் கார்டுகள் கிடைக்கிறது.200 சேனல்கள் வரையில் காண முடியும், மேலும் எஃப்.எம் வானொலியும் கேட்கலாம்.

உதாரணமாக iBall என்ற நிறுவனத்தின்  External USB T.V Tuner card பற்றி பார்க்கலாம்.



இது ஒரு பென் டிரைவ் அளவிலேயே இருக்கும், ஒரு பக்கம் யு.எஸ்.பி மேல் சாக்கெட்டும் ,மறுபக்கம் அனலாக் கோஆக்சியல் கேபிளை இணைக்க சாக்கெட்டும் இருக்கும்.



டிஜிட்டல் AV cable இணைக்க மினி யுஸ்பியுடன் சாக்கெட்டும் உள்ளது. இதில் மினி யுஸ்.பி  AV cable  அடாப்டர் கொண்டு இணைத்துக்கொள்ளலாம், இவை எல்லாமே நாம் வாங்கும் டியுனர் கார்டுடன் அளிக்கப்பட்டுவிடும்.மேலும் ரிமோட் கண்ட்ரோல் எல்லாம் உண்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண்பதற்கான மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டு வழக்கமான தொலைக்காட்சி போல நமது கணினியில் , பதிவு செய்யும் வசதியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணலாம்.



இம்முறையில் ஒரு சேனலில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டு இன்னொரு சேனலின் நிகழ்ச்சியை கணினியில் பதிவும் செய்துக்கொள்ளலாம்.அப்படி கணினியில் பதிவு செய்ததை இணையத்தில் டோரண்ட் மூலம் எளிதில் பகிர முடியும், மேலும் ஒருவரே வெப் ஸ்ட்ரீமிங்க் முறையில் ஒளிபரப்பவும் முடியும்.

recording tv programme:


review :

http://broadbandforum.in/consumer-electronics/74794-exclusive-iball-usb-tv-tuner.html

iBall Claro TV Tuner / AV / FM Radio.

Features:

Clear and Crisp Picture Quality
Slim USB design - easy to carry
Time Shifting - Pause Live TV and Watch later
Real-time and Schedule TV Recording
Watch TV on PC or Laptop
Free Bundled Software - Power Director for Video Capture & Edit, Power Producer for Creating Movie Discs
Listen to FM Radio
Powerful and user-friendly software
Watch and record Analog TV
Video / Audio Capture
Still Image capture with multi-shot mode
Record video in MPEG1/2/4, AVI, VCD or DVD format
Multi-Channel Preview
Scrolling Text marquee support

Powerful and user-friendly software
10-bit analog-to-digital conversion and Noise Reduction

Built-in FM:  Built-in FM Radio with Recording function

Multi AV Input:  Composite and S-Video inputs to connect DVD player, Set Top Box etc.

Interface:  USB Interface

Remote Control:  Full-function IR remote control

System Requirment:

Pentium 2.4 GHz or Centrino 1.4 GHz or above
512MB RAM
1GB free Space for Hard disk
DirectX 9.0C or higher installed
AC97 Compatible Sound Card
One Free USB 2.0 interface

OS Supported:  Windows XP / Vista / 7

Package Contents:

iBall Claro TV Stick
Remote Control & Battery
Quick Installation Guide
FM Antenna
Driver CD with iBall Claro TV Software
Cyberlink Combo CD
Multi AV Cable
USB Extension Cable

MRP:  Rs. 1995( market price around 1500 rs)

Warranty:  1 Year

சுட்டி: http://www.iball.co.in/Product.aspx

இன்னும் கொஞ்சம் தரமாக படப்பதிவு செய்ய வேண்டும் எனில் சுமார் 3000 ரூபாய் விலையில் AverMedia DVD EZMAKER 7 TV Tuner Card என ஒன்று உள்ளது.



அதன்விவரங்கள்:

Specifications of AverMedia DVD EZMAKER 7 TV Tuner Card

IN THE BOX

Sales Package: AverMedia DVD EZMaker 7 (Weight: 50 g), Installation CD (Driver), Installation CD (CyberLink PowerDirector 8 DE & PowerProducer 5 DVD), Quick Installation Guide, USB Cable

GENERAL

Device type: External (PC) for PC
Model ID: DVD EZMAKER 7
Part Number: C039
VIDEO
TV Recording: Yes, TV Recording in MPEG-4 (H.264) formats
Video Analog-to-Digital Converter: Yes
POWER
Input Current: 5 V DC

CONNECTIVITY

Audio Jacks: Yes(In)
Audio L/R In: Yes
Video In: Yes
S-Video In: Yes
USB: USB 2.0

DIMENSIONS

Weight: 50 g

OTHER FEATURES

Additional Features: Edit, Organize and Highlight Video Clips on Storyboard

WARRANTY

Domestic Term: 2 Years
Service Type: Carry In

FlipKart.com போன்ற இணையவர்த்தக தளத்திலும் கிடைக்கின்றன.

http://www.flipkart.com/avermedia-dvd-ezmaker-7-tv-tuner-card/p/itmd2ryha7yuzjhw?pid=TVTD2RYK8AFHJEMV&icmpid=reco_pp_personalhistoryFooter_tv_tuner_card_1_nr

----------------------

கணினி மானிட்டர், எல்.சி.டி ஆகியவற்றையும் ,கணினி இல்லாமல் தொலைக்காட்சியாக பயன்ப்படுத்தவும் எக்ஸ்டெர்னல் டிவி. டியுனர் கார்டு உள்ளது.இதற்கு எந்த மென்பொருளும் நிறுவ தேவையில்லை, கணினியும் தேவையில்லை, மானிட்டர் மட்டுமே போதும்.

iBall External TV Box - CTV27


Features:

Watch TV on LCD / LED or CRT monitor
Plug-n-play, No Software or PC require
Full-band TV signals reception
Enjoy TV programs for leisure entertainment while working on your PC
Built-in FM Radio
High-resolution output delivers clear & stable picture without flicker

HD TV Box - Supports HD resolution up-to 1920 x 1200
3D high efficiency noise reduction to suppress noise effectively
PC / TV Switch

PIP function at PC mode allows you to adjust the size and position of the window

Child Lock function to restrict children from watching certain channels

Full-function remote control

AV interface for multi-media extension to DVD or Set-Top Box

Supports 4:3, 16:9 and 16:10 Aspect ratio

Schedule On/Off function

Built-in speaker

Built-in FM:  Built-in FM Radio

Power Input:  DC 5V / 600mA

RF Input:  47 - 870 MHZ

AV Input:  1Vp-p (PAL/NTSC)
Output Frequency:  Horizontal: 37KHz-75KHz, Vertical: 60Hz (Refresh rate)

Resolution:  800x600@60Hz, 1024x768@60Hz, 1280x1024@60Hz, 1440x900@60Hz, 1680x1050@60Hz, 1920x1080@60Hz, 1920x1200@60Hz

TV System:  PAL(SECAM)-B/G, PAL-I, PAL-D/K

Remote Control:  Full-function Remote control

Package Contents:  XGA TV Box, Stand, Remote Control (Batteries included), Power Adapter, VGA Cable, Stereo Audio Cable, FM Antenna Cable, AV Cable and User Manual

MRP:  Rs. 1899/-
Warranty:  2 Years

http://www.iball.co.in/Product.aspx


குறிப்பு:

தொழில் முறை ரீதியாக வீடியோ கேப்சர் செய்ய பல கிராபிக்ஸ்கார்டுகள் Nvidia, pinnacle போல  உள்ளது , அவற்றை கொண்டு ,நல்ல தரத்தில் டிவிடிக்களை டிடிஎச் ஒளிப்பரப்பின் போது உருவாக்க முடியும், எனவே திரையரங்க வெளியீட்டுக்கு முன் டிடிஎச் ஒளிப்பரப்பு என்பது மொத்த வருமானத்தினை பாதிக்கும் ஒரு முடிவாகும்.
-----------------------

ஒரே கல்லில் பல மாங்காய்கள்:

ஒரு டிடிஎச் செட் டாப் பாக்ஸில் இருந்து பல டீ.விகளுக்கு இணைப்பை கொடுக்க AV splitter எனப்படும் அடாப்டர் உள்ளது. இதில் சிக்னல் பூஸ்டர் மேலும் பல அவுட் புட் முனைகள் என இருக்கும், ஆனால் அனைத்து இணைப்பிலும் ஒரே சேனலே காட்டப்படும். இம்முறையில் தான் உணவகங்கள், பார்கள் ஆகியவற்றில் பல டீ.விக்களில் டிடிஎச் நிகழ்ச்சியினை காட்டுகிறார்கள்.

1:3 AV splitter :

ஒரு செட் டாப் பாக்ஸ் மூலம் மூன்று தொலைக்காட்சிப்பெட்டிகளில் நிகழ்ச்சியினை காணப்பயன்ப்படுத்தலாம், சிக்னல் நன்றாக கிடைக்க இதில் சிக்னல் பூஸ்டரும் உள்ளது.



சென்னையில் ரிட்சி ஸ்ட்ரீட் போனால் பல பிராண்டுகள், பல விலையில் இது போன்ற உபகரணங்கள் கிடைக்கிறது, காசுக்கேற்ற தோசை போல ,கொடுக்கும் காசுக்கு ஏற்ற தரத்தில் வாங்கலாம்.
---------------------------

எனவே லோகநாயகர் தனது விஷ்வ ரூபம் படத்தினை  திரையரங்குகளுக்கு முன்னரே டி.டிஎச்சில் அதிக விலைக்கு வெளியிட்டால் அது திருட்டு டிவிடி தயாரிக்க மட்டுமே உதவும், எனவே திரையரங்குகளுக்கு செல்லும் கொஞ்சம் கூட்டமும் வீட்டோடு முடங்கி விடும் அபாயமே அதிகம் இருக்கிறது.

சிலர் சொல்லலாம் நான் டிவிடியில் படம் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் திரையரங்கிற்கும் செல்வேன் என ஆனால் அதெல்லாம் தனிநபர்களின் விருப்பம், குடும்பத்தோடு படம் பார்க்க செல்பவர்கள்  பெரும்பாலும் டிவிடியில் பார்த்தப்படத்தினை மீண்டும் பார்க்க அரங்கு செல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் திரையரங்க விநியோகம் செய்தவருக்கு பெருத்த நட்டம் உருவாக வாய்ப்புள்ளது.

மேலும் பல இடங்களிலும் கேபிள் டீ.வீ ஆபரேட்டர்கள் டிடிஎச் சேனலை தங்களது கேபிள் ஒளிபரப்பின் மூலமும் பகிர்வதுண்டு, எனவே பல ஊர்களில் கேபிள் ஆபரேட்டர்கள் ஒரே ஒரு டிடிஎச் வைத்து ஊருக்கே படம் காட்டும் சாத்தியமுண்டு , இதனால் பெருத்த வருமான இழப்பும் ஏற்படலாம். இதனை தடுக்க எல்லா ஊரிலும் கேபிள் டீ.வீ ஆபரேட்டர்களை கண்காணிக்க ஆட்களை  நியமிக்க வேண்டும், அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியதும் அல்ல.

எனவே லோகநாயகரே சொந்தமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்தாலும் அவருக்கும் நட்டம் தான் வரும் என்பதே டிடிஎச் சில் ரிலீஸ் செய்வதால் உண்டாகும் பலன்.

லோகநாயகர் தமிழ் திரையுலகில் தொழில்நுட்ப ரீதியாக முன் கூட்டியே சிந்திப்பவர் என  பெருமையாக அவரது ரசிக கண்மணிகள் வேண்டுமானால் சிலாகித்து கொள்ளலாம், ஆனால் அவரது தொழில்நுட்ப அறிவு 100 கோடியில் படம் எடுத்து 1000 ரூபாயில் திருட்டு டிவிடி தயாரிக்க தான் உதவும் என்பதை கூட அறியாத நிலையில் தான் உள்ளது என்பதே அடிப்படையான உண்மை!

*********



பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி,
iBall,FlipKart,DNA news,Times of india,google,AVforum,இணைய தளங்கள்,நன்றி!