Friday, 24 October 2014

கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?


கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?

தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கென தனியே ஒரு அடையாளம் மட்டுமல்ல பெரும் வணிக மதிப்பும் உண்டு ,மற்ற நடிகர்களின் படம் ஓடினால் அமோக வசூல் வீழ்ந்தால் அடியோடு நாசம் என இருக்கும் போது சூப்பர் ஸ்டாரின் சுமாரான அல்லது ஓடாத படங்களின் வசூல் கூட அதே சமயத்தில் வெற்றியடந்ததாக சொல்லப்படும் படங்களின் வசூலை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணமாக  பாபா படம் சரியாக ஓடவில்லை ,தோல்வி என்றார்கள் ஆனால் அதே காலக்கட்டத்தில் வந்து வெற்றி என்று சொன்னப்படங்களின் வசூலை விட பாபா வசூல் மிக அதிகம் என்பதே உண்மை.

லோக நாயகன் என்று சொல்லிக்கொள்பவரின் படமெல்லாம் ஓடினால் போட்டக்காசு தான் கிடைக்கும் ஊத்திக்கொண்டால் தயாரிப்பாளரின் கோவணமும் உருவப்படும் என்பதான வியாபார வல்லமைக்கொண்ட படங்கள்.அதே நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் ஹிட் ஆனால் அதன் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என அனைவருக்கும் அமோக வசூல் மட்டுமல்லாமல் அடுத்து அவர்கள் யாருடைய படத்திலாவது நஷ்டமடைந்தாலும் தாங்க கூடிய அளவு செழிப்படைவார்கள்.அதே சமயத்தில் சுமாராகவோ, அல்லது தோல்வி(வெகு சிலவே) என சொல்லப்படும் படங்களின் வசூல் கூட மிகப்பெரியதாகவே இருக்கும், எனவே நஷ்டம் என்பது எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காமல் போனது அல்லது வட்டியின் விகிதத்தை பொறுத்தே நட்டம் ஆனதாக சொல்ல முடியுமே தவிர போட்ட முதலில் எல்லாம் போய்விடாது முழுதுமோ அல்லது  ஒரு ஆரோக்கியமான தொகையோ மீள கிடைத்துவிடும்.

இதனாலேயே தயாரிப்பாளார்,விநியோகஸ்தரின் ஆபத்பாந்தவனாக சூப்பர் ஸ்டார் இன்றும் திகழ்கிறார்.

இத்தனைக்காலமும் சூப்பர் ஸ்டாரின் வணிக பெருமதிப்பை அனைவரும் நன்றாகவே பயன்ப்படுத்திக்கொண்டார்கள், புதிதாக திரை துறைக்குள் நுழைந்துள்ள  அவரின் வாரிசும் இதை எல்லாம் அவதனித்து அவரின் ஸ்டார் வேல்யுவை பயன்ப்படுத்தி பலன் அடைந்தால்  என்ன என நினைக்க துவங்கிவிட்டார்கள் ,அதில் தவறில்லை ஆனால் பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லையே, அவரின் உடல் நிலை நன்றாக இருந்த போதே சிவாஜி படக்காலத்திலேயே  சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்ன புண்ணியம்  அப்படம்  டிரைலருக்கு மேல போகவில்லை. எதாவது தெரிஞ்சா தானே பயன்படுத்தி அனிமேஷன் படமாக எடுக்க :-))

சுல்தான் தி வாரியர்  எடுக்க முடியாமல் ஏன் வாரியது , அனிமேஷன் படங்களின் முதல் தலைமுறை காலமல்ல இப்போது இருப்பது, எல்லா வசதியும் இருக்கு எடுக்க தெரியாமல் சொதப்பியதால் நேரமும், பணம் மட்டுமே விரயம் ஆனதால்  மீண்டும் சூப்பர் ஸ்டார் வேல்யுவை பணமாக்க ராணாவுக்கு பூஜைப்போட்டார்கள் ஆனால் அவரவர் மனம் போல நடக்கும் என்பதாக எதிர்பாராத விதமாக சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்ல நேரிட்டது. இப்போது தான் மீண்டு வந்துள்ளார் ஆனால் உடனே மீண்டும் ஒரு படம் சூப்பர் ஸ்டாரை வைத்து என்று துவங்கிவிட்டார் வாரிசு , அவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. அனிமேஷன் படமே எப்படி எனத்தெரியாமல் சொதப்பியவர்கள் இப்போது "பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்" என்ற புதிய நுட்பத்தை வைத்து படம் எடுக்க போகிறேன் என குதித்து இருக்கிறார்கள்,( அதனாலே இப்பதிவும் நான் போட வேண்டியதாகிவிட்டது)

இப்போது அனைவருக்கும் நியாயமாக சில கேள்விகள் எழுகின்றன,

# சிவாஜி -தி பாஸ் படக்காலத்தில் துவக்கப்பட்ட சுல்தான் தி வாரியர் -3டி அனிமேஷன் படம் ஏன் முடிக்கப்படவே இல்லை.

# சிவாஜிக்கு பிறகு சில காலம் சும்மா இருந்தார் , பின் எந்திரன் துவங்கி பின்னர் தடைப்பட்டு ஓய்வில் இருந்தார் அப்போது கூட சுல்தான் முடிக்கப்படவே இல்லை, ஏன்?

#பின்னர் அவசரமாக ராணா படம் துவக்கப்பட்டு பூஜை அன்றே உடல் நலன் பாதிக்கப்பட்டு  சிகிச்சைக்கு பின் இப்போது தான் , புணர்ஜென்மம் அடைந்து சூப்பர் ஸ்டார் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய படமாக கோச்சடையானை அறிவித்துள்ளார்கள் கூடவே வந்துள்ள இந்தியாவின் முதல் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர் படம் என்ற அறிவிப்பு தான் ஒரு சந்தேகத்தை தூவியுள்ளது.

அது என்னவெனில் உண்மையில் கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் நடிப்பாரா என்பதே?

ஏன் எனில் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர்  தொழில் நுட்பம் அப்படியானது, அது ஒன்றும் மிக புதிதான நுட்பம் இல்லை ஏற்கனவே இருந்த மோஷன் கேப்சரிங் நுட்பத்தின் நுணுக்கமான அடுத்த கட்டமே ஆகும்.

மோஷன் கேப்சரிங்க்:

ஒரு நடிகரின் உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் சென்சார்கள் பொருத்தி அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக அகச்சிவப்பு கேமிராவில் பதிவு செய்து , அந்த அசைவுகளை கணினி வரைகலை உருவத்துக்கு கொடுத்து செயல்பட வைப்பது. இதற்கென தனி அகச்சிவப்பு கேமராக்கள் , கணினி , மென்பொருள் எல்லாம் பயன்ப்படுத்துவார்கள், ஆனால் இதில் பெறப்படும் சித்தரிப்பு அத்தனை தத்ரூபமாக இருப்பதில்லை. அசைவுகள் செயற்கையாக இருக்கும்,எனவே தனியாக அசைவுகளை மீண்டும் அனிமேஷனில் கட்டுப்படுத்துவார்கள்.

இந்த குறைப்பாட்டை நீக்க வந்தது தான் பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங்க், இது ஒன்றும் அச்சு அசலாக ஒருவரின் நடிப்பை பிரதிபலித்து படமாக்கவில்லை. மேம்பட்ட சென்சார்கள்  கூடுதலான எண்ணிக்கையில் , எளிதாக ,நேர்த்தியாக அசைவுகளை கணினிக்கு மாற்ற ஒரு உடையோடு கூடிய சென்சார் என ஒரு முன்னேற்றம் அவ்வளவே.இம்முறையில் முன்பை விட சிறப்பாக காட்சியமைப்பு வரக்காரணம் புதிய மென்பொருளும் ஹை டெபனிஷன் கேமிராவுமே.

பெர்பார்மென்ஸ் கேப்சர் செய்யப்பயன்படும் லைக்ரா உடை.

பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் வந்த முதல் படம் அவதார் என்று சொல்லிக்கொண்டாலும் அதுவல்ல முதல் முயற்சி மேட்ரிக்ஸ் படமே ,அதே சமயத்தில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் இல் முற்றிலும் கணினி வரைகலைப்பயன்ப்படுத்தி செய்தார்கள் கோலும் என்ற கதாபாத்திரத்தை. பின்னர் கிங்காங்க், போலார் எக்ஸ்பிரஸ், ஸ்பைடர் மேன் -2 வில் எல்லாம் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மையான பெர்ஃபார்மென்ச் கேப்சரிங் செய்யும் கருவி எதுவெனில் வழக்கமான திரைப்பட கேமிரா தான், அது தானே நடிகர்களின் பெர்ஃபார்மன்சை நேரடியாக பதிவு செய்கிறது!

 அவதார் படத்தில் அசைவுகளை இணைக்கும் காட்சி:

இம்முறையில் முழுக்க கணினி வரைகலை உருவத்துக்கோ அல்லது நிஜமான ஒரு நடிகரை ஒத்த உருவத்தினை கணியில் உருவாக்கியோ உயிர்க்கொடுக்க முடியும்.மேலும் காட்சியில் இருக்கும் சூழலை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், வெளிப்புற படபிடிப்பு , இன்ன பிற அரங்க படப்பிடிப்பு எல்லாம் தனியாக பிடித்துக்கொண்டு அதில் கதாப்பாத்திரங்களை புகுத்திக்கொள்வார்கள்.எனவே ஸ்டூடியோவை விட்டு நடிகர்கள் போகாமலே மொத்த படமும் எடுக்க முடியும்.

உடல் அசைவுகளை தெளிவாக காட்ட உடலோடு ஒட்டிய லைக்ரா மோஷன் கேப்சர் உடைப்பயன்படுத்துவார்கள் ,அதில் சென்சார்கள் பதிக்கப்பட்டிருக்கும். முக அசைவுகளை படம் பிடிக்க ஒளிப்பிரதிப்பளிக்கும் வண்ணத்தினை கொண்டு முகத்தில் தேவையான இடங்களில் மார்க் செய்வார்கள். முன்னர் ஒளி உமிழும் எல் ஈ.டி பயன்ப்படுத்தியதால் அதிக மார்க்கர்களை உருவாக்க முடியவில்லை.

பின்னர் அகச்சிவப்பு கேமிராவில் படம் பிடித்து கணினிக்கு அனுப்பிவிட்டால் , தேவையான உருவத்துடன் இணைத்து ஒருங்கிணந்த அசைவுகளை கொடுத்துவிடும்.

ஸ்பைடர் மேன் -2 ல் முதுகில் எந்திரக்கரங்களுடன்ன் ஒரு விஞ்ஞானி பாத்திரம் டாக்டர் ஆக்டோபஸ் என வரும் ,சில குளோஸ் அப் காட்சிகள் தவிர மற்றதெல்லாம் பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்கில் எடுக்கப்பட்ட 3டி மாடல் தான் அப்பாத்திரம்.

முகத்தினை மறைக்காமல் நிஜ நடிகரின் முகத்தினை, பாவனைகளையும் 3டி மாடலுக்கு கொண்டு வந்திருப்பார்கள்.


தத்ரூபமாக முகத்தினைக்காட்ட அரைவட்ட வடிவில் விளக்குகள் பொருத்தி (லைட் ஸ்டேஜ்) அதன் நடுவே நடிகரை உட்கார வைப்பார்கள் பின்னர் அனைத்து கோணங்களிலும் சுழன்று ஹை டெபனிஷன் கேமிராவில் 8 நிமிடத்தில் 2000 படங்கள் எடுக்கப்படும் அதனை கணினியில் உருவாக்கிய 3டி மாடலின் உருவத்தில் முகம் இருக்கும் இடத்தில் பொருத்திவிடுவார்கள். இப்போது 3டி உருவத்தினை எந்தக்கோணத்தில் திருப்பினாலும் அதற்கேற்ப முகம் தெரியும். இதெல்லாம் மென்ப்பொருளே கவனித்துக்கொள்ளும்.ஸ்பைடர் மேன் படத்தில் முகமூடியுடன் வரும் ஸ்பைடர் மேன் எல்லாமே 3டி மாடலே.முகம் தெரியாத நிலை என்பதால் இன்னும் எளிதான வேலை.

முகத்தினை தத்ரூபமாக படம் பிடித்தார் போல முழு உடலையும் கூட செய்ய முடியும், ஆனால் அதை கணினி வரைகலையில் செய்துக்கொள்வார்கள் ஏன் எனில் உண்மையில் குள்ளமாக,ஒல்லியான உருவம் உள்ள நடிகரை உயரமாக ,சிக்ஸ் பேக்குடன் என எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளவே.



இந்த முறையிலே மேட்ரிக்ஸ் படத்தில் வரும் வில்லன் ஏஜன்ட் ஸ்மித் ஒரே நேரத்தில் 100 பிரதிகளாக வரும் காட்சியில் 100 வெவ்வேறு ஆட்கள் தான் நடித்திருந்தார்கள், பின்னர் முகத்தினை மட்டும் இப்படி பிடித்து பொறுத்திவிட்டார்கள்,அப்போது இதற்கு யுனிவர்சல் கேப்சர் என்று பெயர்.அப்போது 5 கேமிராவைக்கொண்டே அனைத்து கோணத்திலும் தெரிவது போன்று முகபாவங்களை படம்ப்பிடித்துக்கொண்டார்கள்.சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து சண்டைப்போட்டதெல்லாம் 3டி மாடல்களே.
ஆண்டி செர்கிஸ்
முழுக்க கணினியில் உருவாக்கிய உருவமான கோலும்( Gollum ), பின்னர் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் படத்தில் கொரில்லாவிற்கு எல்லாம் உடல்,முக அசைவுகளை பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் ஆண்டி செர்கிஸ் என்பவரே கொடுத்தார்.இதற்காக உடல் அசைவுகளை 52 கேமிராவிலும்,   முக அசைவுகளை 20 கேமிராவிலும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் பதிவாக்கியுள்ளார்கள்,இதனாலே அந்த 3டி கணினி வரைகலை கொரில்லா தத்ரூபமாக காட்சியளித்தது.மேலும் நுணுக்கமாக முக அசைவுகளை படம் பிடிக்க தலையில் கேமராவுடன் இணைந்த கவசம் அணிந்துக்கொள்வார்கள்.




போலார் எக்ஸ்பிரஸ் படத்தில் டாம் ஹேங்ஸ் 4 கதாபாத்திரங்களை அவரே இத்தொழிட்பத்தின் மூலம் நடித்திருப்பார்.

டாம் ஹேங்ஸ் அசைவுகள் 3டி உருவத்திற்கு கொடுப்பதை விளக்கும் படம்

கியுரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் வயதாக ஆக குழந்தையாவது போன்ற பாத்திரத்தில் பிராட் பிட் இந்தொழில்நுட்பத்தின் படி பல உருவங்களுக்கு முக பாவனை மட்டுமே கொடுத்து நடித்திருப்பார்.ஹி..ஹி இந்த படத்தின் உல்டா தான் அமிதாப் நடித்த ஃபா!


அவதார்,டின்டின் போன்ற படங்களின் காலத்தில் கணினியின் திறனும், மென்பொருளும் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டதால் சிறப்பாக எடுக்க முடிந்தது.மேலும் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்த நடிப்பை உடனுக்குடன் சூழலுடன் பொருத்தியும் பார்க்கும் வசதியுள்ள வேகமான கணிப்பொறி,மென்பொருளும் பயன்ப்படுத்தப்பட்டது.

அவதார் படப்பிடிப்பில்.

இது போன்று உருவம் மட்டும் கிடைத்து விட்டால் அதற்கான நடிப்பை இயல்பாக அடுத்தவர்களை வைத்துக்கொடுக்க முடியும் என்பதால் இறந்த நடிகர்களையும் நடிக்க வைக்கலாம் , ஆனால் கொஞ்சம் கவனமாக ,செய்ய வேண்டும் ஏன் எனில் அனைத்துக்கோணங்களிலும் முகத்தின் படம் கிடைக்காது என்பதால் ஏதோ ஒரு கோணத்திலேயே காட்ட வேண்டியது இருக்கும்.

மேலும் இனிமேல் ஒரு நடிகர் கேமிரா முன் நிற்காமலே அவரது கணினி முப்பரிமாண உருவத்தை வைத்து ,இன்னொருவரை நடிக்க வைத்து படம் எடுக்கவும் முடியும்.

இப்போது பதிவின் தலைப்பின் பொருள் புரிந்திருக்குமே, கோச்சடையானில் சூப்பர் ஸ்டாரே அவரது உருவத்துக்கு நடிப்புக்கொடுக்க போகிறாரா அல்லது அவரைப்போலவே இமிடேட் செய்யக்கூடிய ஒரு சிறந்த மிமிக்ரி நடிகரை வைத்து பெர்ஃபார்மென்ஸ் கேப்சர் செய்வார்களா என்பதே எனது கேள்வி. குரலை மட்டும் டப்பிங்கில் கொடுத்து விட்டால் போதும் கண்டுப்பிடிக்க முடியாது.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் விரைவாக கோச்சடையானை துவக்கியதே இப்படியெல்லாம் கேள்விகளை உருவாக்குகிறது.ஏற்கனவே சுல்தான் அனிமேஷன் படமே இது போல ரஜினியின் முகம்,உருவத்தினை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மோஷன் கேப்சரிங்கை வேறு ஒருவர் மூலம் செய்து படமாக்க திட்டமிடப்பட்டது, இப்போது அதே வேலை பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் என்ற பெயரில் கோச்சடையானிலும் நடக்கலாம்,பழைய கள் புதிய மொந்தை :-))

சுல்தான் அனிமேஷன்  படத்திற்காக எடுக்கப்பட்ட முகம், உடல் ஆகியவற்றின் டிஜிட்டல் பிரதிகளை பயன்ப்படுத்திக்கொண்டாலே போதும் மீண்டும் புதிதாக 3டி உருவத்தினை உருவாக்க கூடத்தேவை இல்லை. இம்முறை சொதப்பாமல் படத்தினை முடிக்க வேண்டுமென்பதால் தான் இம்முறை அனுபவம் வாய்ந்த கே.எஸ்.ரவிகுமாரை ,ஸ்டூடியோவில் நன்றாக வேலை செய்யவும் , திரைக்கதையை கவனித்து வேலையை முடிக்கவும் கோச்சடையானில் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.


--------

பின்குறிப்பு:

படங்கள் உதவி: கூகிள் படங்கள்,IMDB,AWN தளங்கள், நன்றி!

vishwaroopam in barco auro- 11.1 3d audio.

vishwaroopam in barco auro- 11.1 3d audio.



லோகநாயகர் கமலஹாசர் விசுவரூபம் என்ற திரைக்காவியத்தை செதுக்கி எடுத்து வருகிறார், தமிழ் சினிமாவை உலக சினிமாவாக ஆக்க அவர் ரொம்ப முயற்சிக்கிறார் என லோக நாயகரின் விசுவாசிகள் வழக்கம் போல முரசொலிக்கிறார்கள்.

ஏற்கனவே சிங்கப்பூரில் நடந்த "IIFA film festival" இல் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சினிமாவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அப்படத்தின் ஒலி அமையமைப்பினை 11.1 டிராக்கில் அமைக்க அமெரிக்கா செல்கிறார் என செய்திகள் வெளியாகின. அப்படியானால் சிங்கப்பூரில் ஒலியில்லாமல் படம் திரையிடப்பட்டதா? இல்லை மீண்டும் புதிதாக ஒலிச்சேர்க்கை செய்வாரா என ஒரு சந்தேகம்.

11.1 டிராக் ஒலியமைப்பு என்கிறார்களே அது என்ன என இணையத்தில் துழாவியதில் கிடைத்தவைகளை இங்கே பகிர்கிறேன்.

Barco audio என்ற அமெரிக்க ஒலிப்பொறியியல் வடிவமைப்பு நிறுவனம் தற்சமயம் barco Auro11.1 3d sound என்ற திரையரங்க ஒலி அமைப்புக்கு வடிவமைத்துள்ளது. இம்முறையில் ஒலியமைக்கப்பட்ட முதல் ஹாலிவுட் படம் ஜார்ஜ் லுகாஸ் தயாரிப்பில் வெளிவந்த "ரெட் டெயில்ஸ்" என்ற இரண்டாம் உலகப்போர் அடிப்படையிலான படமாகும் ,இப்படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.


வழக்கமான திரையரங்க ஒலியமைப்பில் டிடிஎஸ் -5.1 , டால்பி டிஜிட்டல் புரோலாஜிக் -7.1 என இரண்டு அமைப்புகளே பெரிதும் பயன்ப்படுத்தப்படுகின்றன.

இரண்டும் தனித்தனி போட்டி நிறுவனம் ஆனால் ஒரே படத்தில் இரண்டு அமைப்பிலும் ஒலிச்சேர்க்கை செய்து இருப்பார்கள், இதன் மூலம், திரையரங்கில் இருக்கும் ஒலியமைப்புக்கேற்ப ஒலிக்கப்படும்.

(திரைப்பட சுருளில் உள்ள ஒலிக்குறிப்புகள், இதில் குறைவான அளவில் பயன்ப்படும் சோனி SDDS ஒலியும் உள்ளது)

மேலும் இவ்வொலியமைப்பின் ஒலிக்குறிப்புகள் மட்டும் இல்லாமல் வழக்கமான ஸ்டீரியோ மற்றும் மோனோ ஒலியும் திரைப்பட சுருளில் இருக்கும், ஏன் எனில் சமயங்களில் டால்பி,டிடிஎஸ் ஒலியமைப்புகள் செயல்படாமல் போனால் இவை அவசரத்துக்கு உதவும். பழைய திரையரங்குகளில் திரையிடவும் உதவும்.

5.1 அல்லது 7.1 என குறிப்பது 5 (அ) 7 சேனல்கள் ஒலிக்கும் ஒரு சேனல் சப்-ஊஃபருக்கும். எனவே 5.1 என்றால் 6 சேனலில் ஒலியும் 7.1 என்றால் 8 சேனலில் ஒலியும் வரும். இவற்றில் 5.1 இல் ஒலிப்பெருக்கிகள் முன்பக்கம் ,வலப்பக்கம், இடப்பக்கம், பின்பக்கம் என்ற அமைப்பில் அனைத்து ஒலிப்பெருக்கியும் கிடைமட்ட தளத்தில் இருக்கும்.

எனவே திரையில் தோன்றும் காட்சியில் ஒலியின் உயர வித்தியாசம் அறிய முடியாது என டால்பி 7.1 இல் இரண்டு ஒலிப்பெருக்கிகளை கூறை உயரத்தில் பொருத்தி செங்குத்து அச்சிலும் ஒலியை உருவாக்கி முப்பரிமான ஒலி என்றார்கள்.

இதன் அடுத்தக்கட்டமாக உயரத்தில் அமைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வேறுப்பட்ட உயரத்தில் ஒலிப்பெருக்கிகளை அமைத்து ,மேலும் ஒலி செல்லும் சேனல்களின் எண்ணிக்கையை 11.1 என 12 சேனல்களில் கொடுப்பது தான் barco Auro11.1 3d sound அமைப்பாகும்.

இவ்வமைப்பில் கூறையில் உள்ள ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விமானம் பறப்பது போன்ற காட்சிகளில் ,"தத்ரூபமான ஒலி சூழல்" திரையரங்கில் உருவாகும், எனவே தான் "ரெட் டெயில்ஸ்" என்ற படத்தில் பயன்ப்படுத்தினார்கள், அப்படம் இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்ட விமானப்படைப்பிரிவின் சாகசத்தினை விவரிக்கும் படம். ரெட் டெயில் என்பது அமெரிக்க விமானப்படையில் ஒரு பிரிவின் சங்கேதப்பெயர் ஆகும்.

அப்படம் வெளியான காலத்தில் மொத்தமே நான்கு திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு அமெரிக்காவில் இருந்தது.எனவே அவ்வொலியமைப்பின் சிறப்பினை பலரும் உணர வாய்ப்பேயில்லை. தற்போது வரைக்கும் உலகம் முழுவதும் 125 திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு வசதியுள்ளது.

ஆரோ11.1 ஒலியமைப்பின் விளக்கப்படம்
சுட்டி:



இந்தியாவில் இது வரையில் ஒரு திரையரங்கிலும் அவ்வசதியில்லை. பின் எதற்கு லோகநாயகர் 11.1 இல் ஒலியமைப்பு செய்யபோவதாக சொல்கிறார் எனப்பார்க்கிறீர்களா எல்லாம் ஒரு "மார்க்கெட்டிங்" உத்திதான்.மேலும் இதில் சின்னதாக ஒரு சூட்சமமும் இருக்கு,அது என்னவெனில் 11.1 இல் ஒலியமைப்பு செய்யாமல் ஏற்கனவே இருக்கும் ஒலியமைப்பினை 11.1 ஆக கன்வெர்ஷன் செய்யும் வசதியை பயன்ப்படுத்திக்கொள்வது தான்.

திரைப்பட ஒலியமைப்பில் சில முதல்கள்:

ஹாலிவுட்டில்,

முதல் டால்பி டிஜிட்டல் திரைப்படம்-பேட்மன் ரிடர்ன்ஸ்.

முதல் டிடிஎஸ் திரைப்படம்- ஜுராசிக் பார்க்-1

தமிழில்.

முதல் டால்பி- குருதிப்புனல்.

முதல் டிடிஎஸ்- கருப்பு ரோஜா.


ஆரோ 11.1 ஒலியமைப்பு கருவி என்பது ஒரு கணினி போன்றது தான், இதில் ஒலியை ஒலிக்க செய்ய ஒரு கோடெக், ஒரு பிராசசர், அப்மிக்ஸ் பிராசசர் என மூன்று பகுதிகள் இருக்கிறது.

இந்த டிடிஎஸ்5.1,டால்பி 7.1,ஆரோ11.1 என்பதெல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலியை கம்பிரஷன் செய்யும் முறையே அதாவது எம்பி-3,வேவ்,மிடி போன்ற கம்பிரஷன் ஃபார்மெட்கள்.

இசையமைப்பாளர்கள் ஒலியமைப்பு,இசையமைப்பு செய்து பதிவு செய்யும் போது 16 டிராக், 32 டிராக் எல்லாம் பயன்ப்படுத்துவதுண்டு, எனவே ஒலிகோப்பின் அளவு பல ஜிகா பைட்டுகள் இருக்கும்,அதனை திரையரங்கில் அப்படியே ஒலிக்க செய்ய இயலாது என்பதால் ஒலிக்கோப்பின் அளவை அழுத்தி சுருக்கவே டிடிஎஸ்,டால்பி,ஆரோ என விதவிதமான கம்பிரஷன் முறைகளை பயன்ப்படுத்துகிறார்கள்.

எம்முறையில் அதிக சேதம் இன்றி துல்லியமாக செய்ய முடியுமோ அதனை தேர்வு செய்வார்கள், சேனல்களின் எண்ணிக்கை கூடும் போது இன்னும் கொஞ்சம் துல்லியமாக இருக்கும்.

டிடிஎஸ் மிக்சிங்க் என்பது 32/16 டிராக்கில் இருக்கும் ஒலிப்பதி செய்யப்பட்ட ஒலியை 6 டிராக்கில் தேவைக்கு ஏற்ப மாற்றி சுருக்குவது,அது போலவே டால்பி 7.1 மற்றும் ,ஆரோ 11.1 ஆகும்.

எந்த முறையில் ஒலிக்கலவை செய்த ஒலியையும் ஆரோ 11.1 அமைப்பில் தியேட்டரிலே11.1 ஆக ஒலிக்க செய்யும், ஆனால் 11.1 இல் ஒலிக்கலவை செய்த துல்லியம் இருக்காது.ஏற்கனவே சிங்கப்பூரில் திரையிடப்பட்ட நிலையில் டிடிஎஸ்,டால்பி என ஒலிக்கலவை செய்து இருப்பார் லோகநாயகர், இப்போது அதனை அப்படியே ஆரோ11.1 ஃபார்மெட் ஆக மாற்ற மட்டுமே செய்வார் என நினைக்கிறேன், இது செலவில்லாத எளிய வழி ,ஆனால் முழுக்க ஆரோ 11.1 இல் ஒலிக்கலவை செய்தது போன்ற தோற்றத்தினை உருவாக்கிவிடுவார், எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.மேலும் 11.1 டிராக்கில் செய்த வித்தியாசத்தினையும் யாரும் உணர முடியாது, ஏன் எனில் அப்படியான ஒலியமைப்பு வசதிக்கொண்ட திரையரங்குகள் இந்தியாவில் , குறிப்பாக தமிழகத்தில் இல்லை.

மேலும் இந்த barco Auro11.1 3d sound ஒலியமைப்பே பழமையான ஒன்றாகிவிட்டது ,இனிமேல் உலக அளவில் , இம்முறையை பெருமளவு பயன்ப்படுத்த மாட்டார்கள் என நினைக்கிறேன் காரணம் ஒலியமைப்பு பொறியியலில் ஜாம்பவான் ஆன டால்பி நிறுவனம் ஒரே தாவலாக 128 சேனல் கொண்ட டால்பி அட்மோஸ் 3டி சர்ரவுண்ட் என்ற ஒலியமைப்பினை உருவாக்கி போட்டியாளர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டது. டால்பி அட்மோஸ் ஒலியமைப்பில் பிக்சார் தயாரிப்பில், டிஸ்னி விநியோகத்தில் பிரேவ் என்றப்படம் இம்மாதம் வெளியாகியுள்ளது.



டால்பி அட்மோஸ் ஒலியமைப்பு அமெரிக்காவில் 14 திரையரங்கிலும் , ஸ்பெயினில் பார்சிலோனவில் ஒன்றும், லண்டனில் ஒன்றும் என இது வரை மொத்தம் 16 அரங்குகளில் மட்டுமே அவ்வசதியுள்ளது.

டால்பி அட்மோஸ் ஒலியமைப்புள்ள அரங்கம்.

டால்பி நிறுவனம் உலகெங்கும் பரவலாக நிறுவ முனைப்பு காட்டிவருகிறது ஏற்கனவே பல திரையரங்குகளில் டால்பி 7.1 உள்ளதால் ,அவர்கள் அனைவரும் அதிக திறனுள்ள டால்பி அட்மோஸ் நிறுவவே முயல்வார்கள்.இவ்வமைப்பில் 128 சேனல்/டிராக்கில் ஒரு காட்சியில் உள்ள 128 வகையான ஒலிக்கூறுகளை தனித்தனி டிராக்கில் தேவைக்கு ஏற்ப ஒலிப்பெருக்கிகளுக்கு வழங்க முடியும்.இதனால் காட்சியின் வீச்சு இன்னும் அதிகம் ஆகும்.இதில் மொத்தம் 64 ஒலிப்பெருக்கிகள் கிடைமட்டத்திலும், கூறையிலும், பல உயர அளவில் அமைக்கப்பட்டு முழுமையான முப்பரிமாண ஒலியை தரும். எனவே இனி டிடிஎஸ், barco Auro11.1 3d sound போன்றவர்கள் அவர்கள் ஒலியமைப்பினை மேம்ப்படுத்தினால் மட்டுமே சந்தையில் நிற்க முடியும்.

கொசுறு:


விஷ்வரூபம் கதை சுருக்கம் என இணையத்தில் போட்டிருக்கிறார்கள், அதில் லோகநாயகர் ,அமெரிக்காவில் கதக் நடனப்பள்ளி நடத்திவருபவர்,அவரை அணு விஞ்ஞானத்தில் ஆய்வு செய்யும் "மாணவியான "ஆன்ட்ரியா காதலித்து மணமுடிக்கிறார். பின்னர் அவரது ஆய்வு படிப்பு முடிந்ததும் விவாகரத்து செய்ய விரும்பும் ஆன்ட்ரியா, ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் போலியான குற்றச்சாட்டு மற்றும் ஆதாரங்களை லோகநாயகரின் மீது சுமத்துகிறார், அதன் பின்னர் லோகநாயகர் உண்மையில் யார் என காட்ட விஷ்வரூபம் எடுக்கிறாராம்.

மேலும் பல புகைப்படங்களில் கையில் வித விதமான துப்பாக்கிகளுடன் "போஸ்" கொடுக்கிறார். எனக்கென்னமோ "mr&mrs smith"ஐ உல்டா அடிச்சிருப்பாங்களோனு தோன்றுது. படம் வந்தா "போஸ் மார்ட்டம்' செய்ய ஒரு கூட்டமே இருக்கு ,உண்மை தெரியாமலா போயிடப்போகுது :-))

இந்தப்படத்தில நடிக்கிற எந்த நடிகையரையும் பார்க்க சகிக்கலை, அடிமாட்டு சம்பளத்துக்கு புடிச்சு போட்டு இருப்பாங்க போல, தீபீகா இப்படத்தில் நடிக்க மறுத்ததாக உலாவும் செய்திக்கும் , இங்கே படம் போட்டதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, சும்மா ஒரு அழகியல் நோக்கிலேயே தீபு படம் போட்டு இருக்கேன் :-))
---------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, டால்பி,டிடிஎஸ், பார்கோ,பிபிசி, விக்கி,கூகிள்,IMDB இணைய தளங்கள்,நன்றி!